திருகோணமலையில் கொரோனா தொற்று உறுதியான முதல் நபருடன் தொடர்புடையவர்கள் இனம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பேலியகொட மீன் சந்தை தொற்றுடன் தொடர்புபட்டு திருகோணமலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபரது வழித்தடங்கள் அறியப்பட்டு அதன் அடிப்படையில் இனம் காணப்பட்டுள்ளள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பொதுச் சுகாதார பரிசோதகர் தரப்பில் இருந்து அருவி இணையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த தொற்றாளர் திருகோணமலை நகரப்பகுதியில் உள்ள தபால் கந்தோர் வீதியில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்திற்கு (ஜிம்) சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு குறித்த உடற்பயிறிசி கூடத்திற்கு தொற்றாளர் சென்றிருந்த போது உடன் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் மற்றும் தொற்றாளருடன் நெருக்கமாக பழகியவர்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அருவி இணையத்திற்கு மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை